ஊரடங்கால் வந்த விபரீதம்…வீடுகளில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் அதிகரிப்பு!!

 

ஊரடங்கால் வந்த விபரீதம்…வீடுகளில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் அதிகரிப்பு!!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. இதுவரை கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,500ஐ தாண்டியுள்ளது. எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. இதுவரை கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,500ஐ தாண்டியுள்ளது. எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரும்படியும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிகிடக்கின்றன.

 

womens
இந்நிலையில் ஊரடங்கு சமயத்தில், வீடுகளில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் அதிகரித்துள்ளதாக தேசிய பெண்கள் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. மார்ச் 24ஆம் தேதியில் இருந்து இதுவரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 257 புகார்கள் வந்திருப்பதாகவும் அதில் 69 புகார்கள் வீடுகளில் நிகழும் வன்முறைகள் குறித்து வந்ததாகவும் பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா கூறியுள்ளார். மார்ச் முதல் வாரத்தில் இதுபோன்று 3 புகார்களே வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் புகார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாகவும் பெரும்பாலான புகார்கள் மின்னஞ்சல் மூலம் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உத்தரபிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் இருந்து அதிக புகார்களை பெற்றிருப்பதாக தேசிய பெண்கள் ஆணையம் கூறியுள்ளது. வரதட்சணை கொடுமை, பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றங்கள் ஊரடங்கு உத்தரவால் சற்று குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.