ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பெஃப்சி தொழிலாளர்கள்: கமல்ஹாசன் ரூ.10 லட்சம் நிதியுதவி!

 

ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பெஃப்சி தொழிலாளர்கள்: கமல்ஹாசன் ரூ.10 லட்சம் நிதியுதவி!

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவி வருகிறது

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600ஐ கடந்த நிலையில், தமிழகத்தில் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் எளிதில் பரவும் தன்மை கொண்டதால் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்தியா முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ttn

அதன் காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதை போன்று பெஃப்சியில் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் மொத்தம் 25 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் மக்கள் நீதிமய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.