ஊதுபத்தி கொளுத்தியதற்கும் ஸ்டாலின் சிபிஐ விசாரணை கேட்பாரா? ஜெயக்குமார் கேள்வி

 

ஊதுபத்தி கொளுத்தியதற்கும் ஸ்டாலின் சிபிஐ விசாரணை கேட்பாரா? ஜெயக்குமார் கேள்வி

ஊதுபத்தி கொளுத்தியதற்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிபிஐ விசாரணை கேட்பாரா? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: ஊதுபத்தி கொளுத்தியதற்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிபிஐ விசாரணை கேட்பாரா? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், சென்னையில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்துவிட்டு, கொல்கத்தாவில் மு.க.ஸ்டாலின் பின்வாங்கியது ஏன்? 

சந்தர்ப்பவாதம் என்று சொன்னால் அது திமுகவிற்கும், ஸ்டாலினுக்கும் தான் பொருந்தும். சென்னையில் ராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிந்துவிட்டு, கொல்கத்தாவில் ஸ்டாலின் பம்மிவிட்டார். இதுதான் அவரது இரட்டை வேடம். யாகம் வளர்ப்பதால் ஒருவர் முதலமைச்சராக முடியுமா? ஒரு அலுவலகத்தில் ஊதுபத்தி அல்லது கற்பூரம் கொளுத்தினால் கூட அதற்கு பெயர் யாகம் வளர்ப்பதா? 

தலைமைச் செயலகத்தில் ஊதுபத்தி கொளுத்தியதற்கு கூட மு.க.ஸ்டாலின் சிபிஐ விசாரணை கேட்பாரா? நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பல கட்சிகள் விருப்பம் தெரிவித்து வருகின்றன . நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது பற்றி அதிமுக அறிவிக்க வேண்டிய நேரத்தில் அறிவிக்கும் என்றார்.