ஊடகங்களிலிருந்து விலக காங்கிரஸ் முடிவு!

 

ஊடகங்களிலிருந்து விலக காங்கிரஸ் முடிவு!

ஒரு மாத காலத்துக்கு டிவி விவாதங்களில் பங்கேற்கப்போவதில்லை என காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.  

ஒரு மாத காலத்துக்கு டிவி விவாதங்களில் பங்கேற்கப்போவதில்லை என காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

 

rahul

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியடைந்தது. இதனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் ராகுல் காந்தியை கட்சியின் மூத்தத் தலைவர் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

congress

இந்நிலையில், ஒரு மாதத்துக்கு தொலைக்காட்சி விவாதங்களில், கட்சி சார்பில் செய்தி தொடர்பாளர்கள் யாரையும் அனுப்பப்போவதில்லை என காங்கிரஸ் கட்சியின் முதன்மை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜி வாலா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் சார்பில் யாரையும் விவாத்தில் பங்கேற்க அழைக்க வேண்டாம் என ஊடக நிறுவனங்களையும் அவர் கேட்டுக் கொண்டு கொண்டுள்ளார்.