உள்ளாட்சித் தேர்தல்.. இட ஒதுக்கீடு குறித்த அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு !

 

உள்ளாட்சித் தேர்தல்.. இட ஒதுக்கீடு குறித்த அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு !

நகர மன்ற தலைவர் பதவிகளுக்குத் தாழ்த்தப்பட்ட பழங்குடியின பெண்களுக்கான இட ஒதுக்கீடு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆம் தேதி ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான மனுத் தாக்கல் நேற்று முன் தினத்தோடு முடிவடைந்த நிலையில், தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களுக்கான பரிசீலனை நடைபெற்று வருகிறது. நாளை, தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்காளர்கள் பட்டியல் வெளியாகும். தேர்தல் பணிகளைக் கண்காணிக்கத் தேர்தல் நடக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி வீதம் 27 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

ttn

அதில், நகர மன்ற தலைவர் பதவிகளுக்குத் தாழ்த்தப்பட்ட பழங்குடியின பெண்களுக்கான இட ஒதுக்கீடு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடலூர் நகர்மன்ற தலைவர் பதவி பழங்குடியின பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுப்பிரிவு பெண்களுக்கு 51 நகராட்சி தலைவர் பதவிகளும், தாழ்த்தப்பட்ட இன பெண்களுக்கு 9 நகராட்சி தலைவர் பதவிகளும் தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கான (பொது) 8 நகராட்சிகளின் தலைவர் பதவிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.