உள்ளாட்சித் தேர்தலில் எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு… அய்யோ பாவம் தேமுதிக- பாமக..!

 

உள்ளாட்சித் தேர்தலில் எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு… அய்யோ பாவம் தேமுதிக- பாமக..!

இரு கட்சிகளும் பங்கீட்டு பிரச்னையை மையப்படுத்தி கூட்டணி கட்சிகளை கழற்றி விட்டு தனித்து போட்டியிடவும் வாய்ப்பு உள்ளதாக அக்கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இந்த உள்ளாட்சி தேர்தல் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு அச்சாரம் என்பதால் இதே கூட்டணி தான் சட்டசபை தேர்தல் வரை நீடிக்கும். அதிமுகவை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியுற்றாலும், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து இதே கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், அதிலும் ஒரு சிக்கல் உள்ளது.

edappadi

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தலில், ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ளதால், அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இதையடுத்து, உள்ளாட்சி தேர்தலுக்கான பேச்சு இக்கூட்டணியில் துவங்கி உள்ளது. சமீபத்தில் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிரதான கட்சி சார்பில் இரண்டு மேயர் பதவிகள் கேட்கப்பட்டு உள்ளன. எந்த ஒரு கூட்டணி கட்சிக்கும் மேயர் பதவியை ஒதுக்கீடு செய்ய அ.தி.மு.க., மேலிடம் விரும்பவில்லை.

இதனால் அக்கட்சி அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறும் வாய்ப்பு உருவாகி உள்ளது. இந்நிலையில், அதிக இடஒதுக்கீடு கேட்டு கூட்டணி கட்சிகள் அடம் பிடித்தால் அக்கட்சிகளை கழற்றி விட்டு ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க அ.தி.மு.க தயாராகி விட்டது. அதேபோல், தி.மு.க.,விடமும், அதன் கூட்டணி கட்சிகள், அதிக இடங்களை கேட்டு பேரம் பேச காத்திருக்கின்றன.

stalin

அதுபோன்ற நெருக்கடி கட்சிகளை ஓரங்கட்டவும் எந்த எதிர்ப்பும் சொல்லாமல் கொடுக்கிற இடங்களை வாங்கிக் கொள்ளும் கட்சிகளை மட்டுமே பக்கத்தில் வைத்திருக்கவும் தி.மு.க தலைமையும் முடிவு செய்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் தங்கள் கட்சி பிரதிநிதிகள் அதிகமாக இருந்தால் தான் அடிமட்டத்தில் இருந்து கட்சியை பலப்படுத்த முடியும் என அ.தி.மு.க., – தி.மு.க., கட்சிகள் கருதுகின்றன. ஒரு சட்டசபை தொகுதிக்கு, இரண்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் 300 ஒன்றியங்களை கைப்பற்றினால் அடுத்த சட்ட சபை தேர்தலில் 150 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என இரு கட்சிகளுமே கருதுகின்றன.edappadi

எனவே இரு கட்சிகளும் பங்கீட்டு பிரச்னையை மையப்படுத்தி கூட்டணி கட்சிகளை கழற்றி விட்டு தனித்து போட்டியிடவும் வாய்ப்பு உள்ளதாக அக்கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.