உலக கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்திய மேற்கிந்திய அணி!

 

உலக கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்திய மேற்கிந்திய அணி!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் மேற்கிந்திய அணியினுடைய ஆட்டத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி சுருண்டது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் மேற்கிந்திய அணியினுடைய ஆட்டத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி சுருண்டது.

இங்கிலாந்தில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ச் மைதானத்தில் மேற்கிந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான இரண்டாவது போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக இமால் உல் ஹாக் மற்றும் பஹர் ஜமான் ஆகியோர் களமிறங்கினர். இதையடுத்து ஹரிஸ், பாபர் அசாம், சர்பராஸ், முகமது ஹபிஸ் ஆகிய அனைவரும் வரிசையாக பலப்பரீட்சை நடத்தினர் ஒருவர் கூட 30 ரன்னை தொட்டுபார்க்காத நிலையில் 105 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து மோசமாக விளையாடியது. இதனை சாதகமாக பயன்படுத்திய மேற்கிந்திய அணி 100 விக்கெட்கள் கூட எடுக்காத பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தி வெற்றிப்பெற்றது. மேற்கிந்திய அணியில் இருந்த ஜாம்பவான்களான கெயில், ஹோப், பிராவோ, ரஸல் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் மேற்கிந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் 108 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது.