உலக கேன்சர் தினம் 2019: பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுதமி உத்வேகம்
Feb 5, 2019, 20:54 IST1549380266000
உலக கேன்சர் தினம் அனுசரிக்கப்பட்ட அன்று (பிப்ரவரி 4) நடிகை கவுதமி கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்களுக்கு உத்வேகம் அளித்திருக்கிறார்.
சென்னை: உலக கேன்சர் தினம் அனுசரிக்கப்பட்ட அன்று (பிப்ரவரி 4) நடிகை கவுதமி கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்களுக்கு உத்வேகம் அளித்திருக்கிறார்.
சென்னை விஎஸ் மருத்துவமனையில் கேன்சரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை நேரில் சந்தித்த கவுதமி, அவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் பேசினார்.சமூகப் பொறுப்புணர்வு உள்ள குடிமக்கள் அனைவரும் இதற்காக தன்னுடைய நேரத்தை ஒதுக்க வேண்டும். இதனால் வலி உள்ளவர்கள் அவர்களுடைய வலியை மறப்பதற்கு இது ஒரு உந்து கோலாக அமையும் என தெரிவித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடிய கவுதமி, அவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி மகிழ்ந்தார்.