உலகிலேயே ‘இந்து மதம்’ மிகவும் வன்முறை நிறைந்த மதமாக மாறியுள்ளது – பொங்கிய நடிகை!?

 

உலகிலேயே ‘இந்து மதம்’ மிகவும் வன்முறை நிறைந்த மதமாக மாறியுள்ளது – பொங்கிய நடிகை!?

நடிகை ஊர்மிளா இந்து மதத்திற்கு எதிராக பேசியதாக அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

மும்பை: நடிகை ஊர்மிளா இந்து மதத்திற்கு எதிராக பேசியதாக அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் ஊர்மிளா 

urmila

பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர்  தமிழில் கமல் ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து மெகா ஹிட் அடித்த, இந்தியன் படத்தில் நடித்து மருத்துவக் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து, இயக்குநர்  ராம் கோபால் வர்மா இயக்கத்தில் ரங்கீலா, சத்யா உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இது தவிர  மலையாளம், கன்னடம், மராத்தி படங்களிலும் ஊர்மிளா  நடித்துள்ளார்

மும்பை வடக்கு தொகுதியில்  போட்டி

urmila

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சி பிரமுகர்களைத் தாண்டி,  நடிகர், நடிகைகளைத் தேர்தல் களத்தில் களமிறக்க பெரும்பாலான அரசியல் கட்சிகள் முனைப்புக் காட்டி வருகின்றன. அதன்படி,  நடிகை ஊர்மிளா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்து அதிகாரப்பூர்வமாக அக்கட்சியில் இணைந்தார். இதையடுத்து மக்களவைத் தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் நடிகை ஊர்மிளா மடோன்கர் போட்டியிடுவதாக அக்கட்சி அறிவித்தது.  

நடிகை ஊர்மிளா மீது புகார்

 

இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் செய்தித்தொடர்பாளர் சுரேஷ் நகுவா, ‘ நடிகை ஊர்மிளாவுக்கு எதிராக புகார் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசிய ஊர்மிளா,  உலகிலேயே இந்து மதம் மிகவும் வன்முறை நிறைந்த மதமாக மாறியுள்ளது” என்று பேசியுள்ளார். ஊர்மிளாவின் இந்த கருத்து  இந்துக்களின் உணர்ச்சிகளைக் காயப்படுத்துவதாக உள்ளது. இதனால் ஊர்மிளா மீது கிரிமினல் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.

முன்னதாக நடிகை ஊர்மிளா இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாகத் தகவல் பரவ, தோல்வி பயத்தால் பாஜகவினர் விஷம செய்திகளைப் பரப்புவதாகக் காங்கிரஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: பொள்ளாச்சி மாணவி கழுத்தறுத்து கொலை: நடுங்க வைக்கும் கொடூர சம்பவம்!