உருகி உருகி மன்னிப்பு கேட்கும் பிக் பாஸ் ஐஸ்வர்யா வீடியோ!
பிக் பாஸ் 2 சீசனின் ரன்னரான ஐஸ்வர்யா, பிக் பாஸ் வீட்டில் நடந்த சில சம்பவங்களுக்காக மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
சென்னை: பிக் பாஸ் 2 சீசனின் ரன்னரான ஐஸ்வர்யா, பிக் பாஸ் வீட்டில் நடந்த சில சம்பவங்களுக்காக மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் நிறைவடைந்தது. இந்த சீசனின் வின்னராக ரித்விகாவும், ரன்னராக ஐஸ்வர்யாவும் வெற்றிப்பெற்றனர். சுமார் 105 நாட்களாக பிக் பாஸ் வீட்டில் இருந்த ஐஸ்வர்யா பிக் பாஸுக்கு செல்லக்குட்டியாக இருந்தாலும், பாலாஜி மீது குப்பையைக் கொட்டி மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டார்.
இந்த சம்பவத்திற்காக நிகழ்ச்சியிலேயே பலமுறை மன்னிப்புக் கேட்டிருந்தாலும் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய பிறகு வீடியோ மூலம் மன்னிப்புக் கேட்டு, தனது ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
Love you all from the bottom of my heart ???? Thanks for showering your love and support towards me? pic.twitter.com/kTaWHHsk8s
— Aishwarya Dutta (@AishwaryaaDutta) October 3, 2018
இது தொடர்பாக வீடியோ ஒன்றை ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் நான் வேண்டுமென்றே எதையும் செய்யவில்லை. அதற்காக எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். 6 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பல சவால்களை சந்தித்த எனக்கு, பிக் பாஸ் நிகழ்ச்சி இத்தனை பேரின் பாசத்தையும் எனக்கு உணர்த்தியிருக்கிறது. எனக்கு அன்பும், ஆதரவும் அளித்த அனைவருக்கும் நன்றி என்று உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.