உயிரை பறித்த முன்னாள் காதல்: திருமணமான ஆறு மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

 

உயிரை பறித்த முன்னாள் காதல்:  திருமணமான ஆறு மாதத்தில் இளம்பெண்  தூக்கிட்டு தற்கொலை!

 திருமணமான இளம்பெண் ஒருவர் தனது பழைய காதலனுடன் செல்போனில் பேசியதை கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் : திருமணமான இளம்பெண் ஒருவர் தனது பழைய காதலனுடன் செல்போனில் பேசியதை கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் கவின்குமார். இவருக்கும்  சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியைச் சேர்ந்த ஹேமலதா என்பவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு ,முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. 

suicide

இந்நிலையில் ஹேமலதா திருமணத்திற்கு முன்பாக  விஜய் என்பவரை  காதலித்து வந்துள்ளார்.  திருமணத்திற்கு பிறகும் விஜயுடன்  செல்போனில் ரகசியமாக பேசி வந்ததாகத் தெரிகிறது.  இதை தெரிந்து கொண்ட அவரது கணவர் கவின், மனைவியின்  அண்ணனிடம் கூற, அவர் ஹேமலதாவை அழைத்து பேசியுள்ளார். 

இதனால் மனமுடைந்த ஹேமலதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த குமாரபாளையம் போலீசார் ஹேமலதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் இந்த விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.