உயிரிழந்த மருத்துவரின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் மறுஅடக்கம் செய்யலாம்- பேராயர் ஜார்ஜ் அந்தோணி

 

உயிரிழந்த மருத்துவரின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் மறுஅடக்கம் செய்யலாம்- பேராயர் ஜார்ஜ் அந்தோணி

சென்னையை சேர்ந்த மருத்துவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதையெடுத்து அவரது உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய அப்பகுதியில் சிலர்  எதிர்ப்பு தெரிவித்தனர்

சென்னையை சேர்ந்த மருத்துவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதையெடுத்து அவரது உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய அப்பகுதியில் சிலர்  எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மருத்துவரின் உடலை ஏற்றி வந்த வாகனத்தையும் அதில் இருந்தவர்களையும், சிலர் கொடூரமாக தாக்கியது. இதனையடுத்து அந்த மருத்துவரின் உடல் சென்னை அருகே வேலப்பன்சாவடியில் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது.

மருத்துவர் சைமன்

இந்நிலையில் ,கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமன் மனைவி  ஆனந்தி சைமன், கீழ்பாக்கம் கல்லறையில் தனது கணவரின் உடலை மறுஅடக்கம் செய்ய வலியுறுத்தியிருந்தார்.இதையெடுத்து மருத்துவர் சைமன்  உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என பேராயர் ஜார்ஜ் அந்தோணி கூறியுள்ளார்.