உன் கணவனுக்கு துரோகம் செய்யும் நீ எனக்கு துரோகம் செய்ய மாட்டாய் என என்ன நிச்சயம்? கள்ளகாதலியை லாட்ஜில் வைத்து கொன்ற கொடூரம்!

 

உன் கணவனுக்கு துரோகம் செய்யும் நீ எனக்கு துரோகம் செய்ய மாட்டாய் என என்ன நிச்சயம்? கள்ளகாதலியை லாட்ஜில் வைத்து கொன்ற கொடூரம்!

சென்னை பெரியமேட்டில், லாட்ஜில் வைத்து கள்ளக் காதலியைக் கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை பெரியமேட்டில், லாட்ஜில் வைத்து கள்ளக் காதலியைக் கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் முருகன்குடி கிராமத்தைச் சேர்ந்த வீராசாமிக்கும், மோகனாவுக்கும் இடையே மூன்று ஆண்டுகளாக தகாத உறவு இருந்துள்ளது. இருவரும் கடலூரிலிருந்து புறப்பட்டு சென்னை பெரியமேடுக்கு வந்தனர். அங்கு லாட்ஜ் எடுத்து தங்கியுள்ளனர். அப்போது  மதுபோதையில் இருந்த வீராசாமி, உன் கணவனுக்கு துரோகம் செய்யும் நீ எனக்கு துரோகம் செய்ய மாட்டாய் என என்ன நிச்சயம் என கேட்டு மோகனாவிடம் சண்டை போட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, தனது வேட்டியால் மோகானவின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். கொலை செய்துவிட்டு மின்விசிறியில் தூக்கில் தொங்கியது போல நாடகத்தை நடத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 

விடுதி ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில், பெரியமேடு காவல்துறையினர் வீராச்சாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து தாலி கயிறு, கம்மல், மூக்குத்தி, பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. 

கொலை செய்யப்பட்ட மோகனா ரயிலிவேயில் பணி புரிந்ததாகவும் அவரது கணவரும் ரயில்வேயில் பணி புரிவதாகவும் தெரிகிறது.