உதயநிதிக்காக புதுமுக நடிகரை ஓரங்கட்டிய ‘சைக்கோ’ இயக்குநர் மிஷ்கின்!

 

உதயநிதிக்காக புதுமுக நடிகரை ஓரங்கட்டிய ‘சைக்கோ’ இயக்குநர் மிஷ்கின்!

‘சைக்கோ’ திரைப்படத்தில் வாய்ப்புத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக இயக்குநர் மிஷ்கின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை: ‘சைக்கோ’ திரைப்படத்தில் வாய்ப்புத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக இயக்குநர் மிஷ்கின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன் போன்ற பல வித்தியாசமான படங்களை தமிழ் சினிமாவிற்கு வழங்கியவர் இயக்குநர் மிஷ்கின்.

இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான துப்பறிவாளன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், உதயநிதியை வைத்து ‘சைக்கோ’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் ரகுநாதனின் மகன் மைத்ரேயாவிடம் ‘சைக்கோ’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, புதுமுக நடிகர் மைத்ரேயா வெளியிட்டுள்ள வீடியோவில், “என்னிடம் இப்படத்திற்காக பணம் பெற்றுவிட்டு மிஷ்கின் ஏமாற்றிவிட்டார். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரபல இயக்குநர் மீதான புதுமுக நடிகரின் இந்த குற்றச்சாட்டு, தமிழ் திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.