உண்மையில் யாருக்கு குருப்பெயர்ச்சி? ஓபிஎஸ் மகன் ஆருடம்

 

உண்மையில் யாருக்கு குருப்பெயர்ச்சி? ஓபிஎஸ் மகன் ஆருடம்

ஆலங்குடி கோயிலில் நடைபெற்ற குருபெயர்ச்சி விழாவிற்குப் பின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் பேசினார்.

புதுக்கோட்டை: ஆலங்குடி கோயிலில் நடைபெற்ற குருபெயர்ச்சி விழாவிற்குப் பின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் பேசினார்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க தன்னுடன் ஓ.பி.எஸ் ஆலோசனை நடத்தியதாக டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.

டிடிவி தினகரனின் இந்த குற்றச்சாட்டிற்கு ஓ.பன்னீர்செல்வம் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார். ஆனால், அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் இந்த குற்றச்சாட்டை பகிரங்கமாகவே மறுத்துள்ளனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. அதில் துணை முதல்வரின் மகன் ரவீந்திரநாத் கலந்துகொண்டு தரிசனம் செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தற்போதுதான் குருப்பெயர்ச்சி நடந்துள்ளது. இனி தான் யாருக்கு நல்ல நேரம், யாருக்கு கெட்ட நேரம் எனத் தெரியவரும்” என தெரிவித்துள்ளார்.