உடைந்தது வரலட்சுமி – விஷால் காதல் : வரலட்சுமி ஓபன் டாக்!

 

உடைந்தது வரலட்சுமி – விஷால் காதல் : வரலட்சுமி ஓபன் டாக்!

நடிகர் விஷால், வரலட்சுமி இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது இந்த உறவு முறிந்துள்ளதை வரலட்சுமி உறுதி செய்துள்ளார்.

சென்னை: நடிகர் விஷால், வரலட்சுமி இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது இந்த உறவு முறிந்துள்ளதை வரலட்சுமி உறுதி செய்துள்ளார்.

நடிகர் விஷால்- வரலட்சுமி இருவரும் காதலித்து வந்தனர். இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொண்டனர். இதையடுத்து நடிகர்கள் சரத்குமார், ராதாரவி ஆகியோருக்கு எதிராக நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து   திருமணம் குறித்து பேசிய விஷால், ‘வரலட்சுமியும் நானும் சிறு வயது முதலே நண்பர்கள். நடிகர் சங்கக் கட்டடத்தில் முதல் முகூர்த்தம் என் திருமணம்தான். இப்போதே  கார்த்தியிடம் சொல்லி பதிவு செய்து விட்டேன்’ எனக் கூறியிருந்தார். இதன் மூலம் விஷால் -வரலட்சுமி திருமணம் உறுதி என நம்பப்பட்டது. 

varalakshmi

அதன் பின்  நடிகர் சங்க பணத்தில் ரூ.3 கோடி வரை சரத்குமார் மோசடி செய்ததாக குற்றம் சாட்டிய விஷால், அவரை நடிகர் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து சமீபத்தில் தூக்கினார். நீதிமன்றத்திலும் அவர் மீது புகார் கொடுத்தார். இதற்கு முன் தனது காதலர் விஷால், தனது தந்தையிடம் மோதிய போதெல்லாம் வரலட்சுமி பெரிதாக எதிர்ப்பு காட்டவில்லை. ஆனால், நடிகர் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியதால் விஷால் மீது வரலட்சுமிக்கு கடும் கோபம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் சில காலமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.

varalakshmivishal

இந்நிலையில் சமீபத்தில் இணையதள ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ள நடிகை வரலட்சுமி, ‘விஷாலும்  நானும் காதலிப்பதாகவோ, டேட்டிங் செல்வதாகவோ வரும் தகவல்களில் உண்மையில்லை. விஷாலுக்கு, திருமணத்திற்குப் பெண் பார்த்தால், நானே பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கத் தயார். அவர் திருமணம் செய்தால் மகிழ்ச்சியடையப் போவது நான்தான்.எதற்காக விஷாலுடன் என்னை இணைத்துப் பேசுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை ‘என வெளிப்படையாகக் கூறி அவர்களது காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். விஷால் வரலட்சுமியின் காதல் முறிவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.