உடலில் தீ வைத்துக் கொண்ட அக்ஷய் குமார்- அதிர்ச்சியில் ரசிகர்கள்!

 

உடலில் தீ வைத்துக் கொண்ட அக்ஷய் குமார்- அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், விழா ஒன்றில் தனது உடலில் தீ வைத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்,விழா ஒன்றில் தனது உடலில் தீ வைத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள நடிகர்களில் ஒருவர். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதையும் வென்றுள்ளார்.

akshay kumar

இந்நிலையில்,மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அக்‌ஷய் குமார், தனது உடலில் தீ வைத்துக்கொண்டு நடந்து வந்தது பார்ப்போரை அதிர்ச்சி அடைய வைத்தது. இவர் தற்போது தி எண்ட்(THE  END ) என்ற பெயரில் அமேசான் தளத்தில் தொடர் ஒன்றில் பங்கேற்கவிருக்கிறார். இதன் அறிமுக விழாவில் தான் அவர் உடல் முழுவதும் நெருப்பு எரிய நடந்து வந்தார்.

akshay kumar

 

இதுகுறித்து அவர் தெரிவிக்கும் போது ஆக்சன் எனக்குள்ளேயே இருக்கிறது. முதலில் நான் ஒரு ஸ்டண்ட் மேன் பின்னர் தான் நடிகர் எனறார். 

இதனை பார்த்த அவரது மனைவி, இதன் பிறகு நீங்கள் உயிரோடிருந்தால் வீட்டிற்கு வாருங்கள், ‘நான் உங்களை கொல்ல போகிறேன் என்று ட்வீட் செய்திருந்தார்.  இதற்குப் பதிலளித்த அக்ஷய் இதற்குதான் நான் உண்மையில் பயம் கொள்கிறேன்’ என்று அதில் பதிவிட்டுள்ளார்.