‘உங்களை நினைந்து பெருமைப்படுகிறேன்’: ரத்ததானம்  செய்த ரசிகர்கள் குறித்து தனுஷ் நெகிழ்ச்சி!

 

‘உங்களை நினைந்து பெருமைப்படுகிறேன்’: ரத்ததானம்  செய்த ரசிகர்கள் குறித்து தனுஷ் நெகிழ்ச்சி!

தனுஷ் ரசிகர்கள் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததானம் செய்துள்ளனர். 

சென்னை: தனுஷ் ரசிகர்கள் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததானம் செய்துள்ளனர். 

நடிகர் தனுஷின் இன்று தனது 36வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதையொட்டி அவரது ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.பொதுவாக ஒரு ஹீரோ பிறந்தநாளன்று அவரது ரசிகர்கள் கேக் வெட்டுவது, பேனர் வைப்பது போன்று வின் செலவு செய்வார்கள் ஆனால் தனுஷ் ரசிகர் மன்ற தலைவர்கள் சற்று சிந்தித்து வித்தியாசமாக செய்துள்ளனர். 

தனுஷ் ரசிகர் மன்ற தலைவர் சுப்பிரமணியம் சிவா, செயலாளர் பி. ராஜா தலைமையில் ரத்ததான முகாம் இன்று சென்னையில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. அதில் தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட தனுஷ் ரசிகர் மன்ற ரசிகர்கள் கலந்து கொண்டனர். மேலும் தமிழ் நாட்டில் ஒரே இடத்தில் இவ்வளவு ரசிகர்கள் இணைந்து ரத்ததானம் செய்வது இதுவே முதல் முறை என்று சொல்லப்படுகிறது. 

dhan

அப்போது அதில் பேசிய தனுஷ், ‘ரத்ததானம் செய்த உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். அனைவரிடமும் அன்பை மட்டும் செலுத்துவோம்’ என்று கூறியுள்ளார்.