ஈஸ்வர் – மகாலட்சுமி காதல் கதை: ஊத்திமூடிய தேவதையை கண்டேன் சீரியல்!

 

ஈஸ்வர் – மகாலட்சுமி காதல் கதை:   ஊத்திமூடிய தேவதையை கண்டேன் சீரியல்!

ஈஸ்வர் மீது 7பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஈஸ்வரையும் அவரது தாயாரையும் கைது செய்து ஜாமீனில் விடுவித்து உள்ளனர்.

சின்னதிரை நடிகை ஜெயஸ்ரீ தனது கணவரும் நடிகருமான ஈஸ்வர் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில் சின்னதிரை நடிகை மகாலட்சுமியுடன் கணவருக்கு ஏற்பட்ட தகாத உறவால், தன்னிடம் விவாகரத்து கேட்டு கணவனும் மாமியாரும் தன்னை அடித்து துன்புறுத்துவதாகக் கூறி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளார்.   ஜெயஸ்ரீ கொடுத்த புகாரின் அடிப்படையில் ஈஸ்வர் மீது 7பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஈஸ்வரையும் அவரது தாயாரையும் கைது செய்து ஜாமீனில் விடுவித்து உள்ளனர்.   

ttn

இதுகுறித்து கூறிய  நடிகை ஜெயஸ்ரீ, குழந்தையுடன் தனியாக  என்னை ஈஸ்வர் நன்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.  என் கணவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தேவதையை கண்டேன்’ சீரியலில்  மகாலட்சுமியுடன் நடித்திருந்தார். மகாலட்சுமிக்கு  திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.  ஆனால் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் என்னிடம் விவகாரத்து பெற்றுக்கொண்டு மகாலட்சுமியை திருமணம் செய்ய  ஈஸ்வர் ஆசைப்பட்டார். என்னிடம் இதற்காக விவாகரத்து கேட்டார். நான் கொடுக்க மறுத்துவிட்டேன். இதனால் ஆத்திரமடைந்த அவர் தினமும் என்னை அடித்து கொடுமைப்படுத்தி வந்தார்’ என்று கூறினார்.  ஆனால் இதற்கு மகாலட்சுமி மற்றும் ஈஸ்வர் தரப்பு மறுப்பு தெரிவித்ததோடு, ஜெயஸ்ரீக்கு எதிராக பேட்டியளித்தனர்.

ttn

இந்நிலையில் ஈஸ்வர் – மகாலட்சுமி இணைந்து நடித்துக்கொண்டிருக்கும் தேவதையை கண்டேன் சீரியலை நிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரபல இதழுக்கு பேட்டியளித்துள்ள யூனிட் ஆட்கள் சிலர், ஈஸ்வர் ஜெயிலுக்கு போன போது  அவருக்கு பிரேக் குடுத்துருந்தாங்க. அதனால ஷூட்டிங்கில் பிரச்னை ஏதுமில்லை. ஈஸ்வரும்  மகாலட்சுமியும் பழையபடி ஷூட்டிங்கிற்கு வருவாங்களானு நெனைச்ச போது தான் அவங்க எந்த சலனமும் இல்லாம ஷூட்டிங்குக்கு வந்தாங்க. அவங்களுக்குள்ள எந்தவித மனக்கசப்பையும் உண்டாக்கலைனு தெரியுது.  ஆனால்  இவங்களால சீரியல் மீது எதிர்மறையான எண்ணம் ஏற்பட்டுருக்குன்னு சிலர் வெளிப்படையாக பேச ஆரம்பிச்சிட்டாங்க’ என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சேனல் தரப்பிலோ, ஆமாம் உண்மை தான், இந்த மாதம் இறுதியில முடிய போகுது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நீங்கள் புது சீரியலை பார்க்கலாம்’ என்றனர். 

ttn

மகாலட்சுமி நடித்த `முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேருக்குதான் அர்ச்சனை’ என்கிற அரசு விளம்பரம் வைரலானதை  அடுத்து அவரின் செல்வாக்கும் உயர்ந்ததாம். அதனால் தான் தேவதையை கண்டேன் சீரியலில் இருந்த நடிகர் ஶ்ரீ , ஷாமிலியை தூக்கிவிட்டு ஈஸ்வரும் மகாலட்சுமியும் அந்த இடத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.