ஈரோட்டில் நடைபெற்ற பிரியாணி சாப்பிடும் போட்டி! 10 நிமிடத்தில் ஒரு கிலோ பிரியாணி சாப்பிட்டு அசத்திய இளைஞர்

 

ஈரோட்டில் நடைபெற்ற பிரியாணி சாப்பிடும் போட்டி! 10 நிமிடத்தில் ஒரு கிலோ பிரியாணி சாப்பிட்டு அசத்திய இளைஞர்

ஈரோட்டில் நடைபெற்ற பிரியாணி சாப்பிடும் போட்டியில் இளைஞர் ஒருவர் ஒன்பதரை நிமிடத்தில் பிரியாணி சாப்பிட்டு அசத்தியுள்ளார்.

பெருந்துரை சாலையில் இயங்கிவரும் உணவகத்தில் பிரியாணி போட்டி நடைபெறவுள்ளதாக பேஸ்புக்கில் விளம்பரம் கொடுத்தது. இதை பார்த்த ஏராளமான இளைஞர்கள் மற்றும் பிரியாணி பிரியர்கள் போட்டியில் கலந்துக்கொள்ள வந்தனர். போட்டியில் பங்கேற்க 500க்கும் மேற்பட்டோர் பதிவு செய்த நிலையில், பெண்கள் உட்பட 25 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். ஒரு கிலோ சிக்கன் பிரியாணியை முதலில் சாப்பிட வேண்டும் என்பதே போட்டியின் விதி. அப்படி யார் முதலில் சாப்பிட்டு முடிக்கின்றனரோ அவர்களுக்கு ரூ. 5 பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Briyani

இதில் ஒரு கிலோ பிரியாணியை ஒன்பதரை நிமிடத்தில் சாப்பிட்டு பெருந்துறையை சேர்ந்த ராகுல் முதல் பரிசை தட்டிச்சென்றார். பரணி தரன் என்பவர் 2வது பரிசையும், ஜார்ஜ் என்பவர் 3வது பரிசையும் பெற்றனர்.