இ.எம்.ஐ கட்டவில்லை என்று மனைவியை ஆபாசமாக திட்டிய ஊழியர்…அரிவாளுடன் ஆபீஸுக்கு போய் மிரட்டிய கணவர்!

 

இ.எம்.ஐ கட்டவில்லை என்று மனைவியை ஆபாசமாக திட்டிய ஊழியர்…அரிவாளுடன் ஆபீஸுக்கு போய் மிரட்டிய கணவர்!

ஊழியர்கள் பணத்தை கட்ட சொல்லி கூறியுள்ளனர். அப்போது அவர்கள் ஆபாசமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

தேனி மாவட்டம் கம்பத்தில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் மூலம் பெண் ஒருவர் மாத தவணை முறையில் செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால்  அவர் ஒழுங்காக செல்போனுக்கான தொகையை கட்டவில்லை  என்று தெரிகிறது. இதனால் அந்த பெண்ணை செல்போனில் தொடர்புகொண்ட ஊழியர்கள் பணத்தை கட்ட சொல்லி கூறியுள்ளனர். அப்போது அவர்கள் ஆபாசமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

ttn

இதுகுறித்து அப்பெண் தனது கணவரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், நேற்று மாலை பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்திற்குள் அரிவாளுடன் சென்று அங்கிருந்தவர்களை மிரட்டியுள்ளார். இதனால் அங்கிருந்த ஊழியர்கள் பதறிப்போயுள்ளனர்.

ttn

பின்பு அவரை சமாதானம்  செய்வது போல அலுவலகத்தை பூட்டிக்கொண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால்  அதற்குள் சிலர் பேச்சுவார்த்தை நடத்தி அந்த நபரை வெளியில் விட்டுள்ளனர். கதவுகள் திறக்கப்பட்டதால் அந்த நபர் அங்கிருந்த ஊழியர்களைப் பார்த்துத் திட்டியவாறே  சென்றுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு தொற்றி கொண்டது.