இவங்க லவ் பண்றங்களோ, இல்லையோ?: விஜய் டீவியே இவங்கள சேர்த்துவைத்து விடும் போல? 

 

 இவங்க லவ் பண்றங்களோ, இல்லையோ?: விஜய் டீவியே இவங்கள சேர்த்துவைத்து விடும் போல? 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் தொடங்கி 58 நாட்களைக் கடந்துள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதில் இது வரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, ரேஷ்மா, சரவணன், மதுமிதா, சாக்ஷி அகர்வால் மற்றும் அபிராமி ஆகியோர் வெளியேறியுள்ளனர். அதை தொடர்ந்து இந்த வார நாமினேஷனில் சாண்டி, தர்ஷன், கஸ்தூரி மற்றும் சேரன் ஆகியோர் உள்ளனர். நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளிலிருந்து பிக் பாஸ் வீட்டிற்குள் காதல் கதையே ஒளிபரப்பாகி வருகிறது. 

கவின்,லாஸ்லியா மற்றும் சாக்ஷியின் முக்கோண காதல் கதையை பார்த்து மக்களுக்கு போர் அடித்துவிட்டதால் அதிலிருந்து சாக்ஷியை எலிமினேட் செய்து அனுப்பி வைத்துவிட்டனர். அவர் வெளியேறிய பின்பு கவின்- லாஸ்லியா காட்டில் ஒரே மழை தான். கேட்க யாரும் இல்லை என்று நினைத்தார்களோ என்னவோ இரவு நீண்ட நேரம் அமர்ந்து பேசுவது, சாப்பிடும் பொது ஒன்றாக சாப்பிடுவது என்று பிக் பாஸ் வீட்டிற்குள் லவ் பேட்ஸ் போல் சுற்றி திரிகின்றனர். 

இந்த நிலையில் இன்றைக்கான மூன்றாவது புரோமோவில் கவின்- லாஸ்லியா குறித்து காட்டப்பட்டுள்ளது. அதில் கவின், ‘பண்றது எல்லாம் பன்னிட்டு அப்போ அப்போ…வந்து எல்லாரும் சமாதானம் பன்றாங்க’ என்று லாஸ்லியாவிடம் கூற உடனே லாஸ்லியா வெட்கப்பட்டுக் கொண்டே அவரை பார்த்துச் சிரிப்பது போன்று புரோமோ முடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் சும்மாக இருந்தாலும் இந்த விஜய் டீவியே இவங்கள சேர்த்து வெய்து விடும் போல?