இளைஞர் ஒருவர் கொடுத்த வினோத புகார்…! செய்வதறியாமல் திகைத்த போலீஸ்!?

 

இளைஞர் ஒருவர் கொடுத்த வினோத புகார்…! செய்வதறியாமல் திகைத்த போலீஸ்!?

பெற்றோர் திருமணம் செய்து வைக்காததால் மனம் நொந்து போன ஒரு இளைஞர், தனது பெற்றோர் மீது புகார் கொடுத்து உத்திரபிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.அவர் பெயர்-அசிம் மன்சூரி.

பெற்றோர் திருமணம் செய்து வைக்காததால் மனம் நொந்து போன ஒரு இளைஞர், தனது பெற்றோர் மீது புகார் கொடுத்து உத்திரபிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.அவர் பெயர்-அசிம் மன்சூரி.

marriage

உத்திரபிரதேசதிலுள்ள ‘கைய்ரானா நகர்’ பகுதியைச் சேர்ந்த அசிம் மன்சூரிக்கு 26 வயது ஆகிறது.தனக்கு  திருமணம் செய்து வைக்க கோரி பெற்றோரிடம் பலமுறை முறையிட்டுள்ளார்.அவர்களும் பார்க்கிறேன் என்று சொல்லியே நாட்களைக் கடத்தியதாகத் தெரிகிறது!

இப்படியான சூழ்நிலையில்தான் போலீஸ் ஸ்டேஷன் படிஏறியிருக்கிறார் அசிம் மன்சூரி! இதில் பிரச்சினை என்னென்னா…இவரது உயரம் குறைவாக இருப்பதால் அதற்கேற்றபடி பெண் தேடுவதில் அவரது பெற்றோருக்கு சிக்கல்! தங்களது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லை என்பதில் அசிமின் பெற்றோரும் வருத்தத்தில்தான் இருக்கிறார்கள்.
 
இதை உணராமல் புகார் கொடுத்திருக்கிறார்.தவிர,தனக்கு  திருமணம் செய்து வைக்க போலீசார் உதவ வேண்டும் என்றும் புகாரில் கோரிக்கை வைத்திருக்கிறார்.இதனால் குறிப்பிட்ட காவல்நிலையத்தில் உள்ள போலீசார் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
இந்த செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பரவிவருவதால்,விரைவில் அவருக்கான ஜோடி கிடைக்கும் வாய்ப்பே அதிகம் என்கிறார்கள் அங்கிருக்கும் காவல்துறை அதிகாரிகள்!