இளம் இயக்குநரை வீட்டிற்கு அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்!
இயக்குநர் கார்த்திக் நரேனை ரஜினிகாந்த் அவரின் இல்லத்திற்கு அழைத்துப் பாராட்டியுள்ளார்.
இயக்குநர் கார்த்திக் நரேனை ரஜினிகாந்த் அவரின் இல்லத்திற்கு அழைத்துப் பாராட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இளம் இயக்குநர்கள் மத்தியில் மிகவும் பரிட்சயமானவர் கார்த்திக் நரேன். தனது முதல் படைப்பான துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பின்பு நராகசுரன் என்ற படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து அருண் விஜய், பிரியா பவானி சங்கர் ஆகியோரை வைத்து ‘மாஃபியா’ என்ற த்ரில்லர் படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் டீசரை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் கார்த்திக் நரேனை தனது வீட்டிற்கு அழைத்துப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ சூப்பர் கண்ணா.. செம்மையா இருக்கு. இந்த வார்த்தைகள் தான் மாஃபியா டீசரை பார்த்துவிட்டு ரஜினி சார் என்னிடம் கூறியது’ என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
“Brilliant work kanna. Semaya irukku. Loved it” These were Rajini sir’s words after watching the teaser of Mafia. Thank god I did not faint. Blown away by his humility. Thalaivar for a reason ?? pic.twitter.com/e6pdZtOjbI
— Karthick Naren (@karthicknaren_M) September 14, 2019
எந்த நடிகர், எந்த இயக்குநர் படமாக இருந்தாலும் சரி பிடித்து விட்டால் சம்மந்தப்பட்டவரை நேரில் அழைத்தோ, போனில் தொடர்புக்கொண்டோ உடனே பாராட்டி விடுவது தான் நடிகர் ரஜினிகாந்த்தின் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.