இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய ஆடியோ; பின்னணியில் டிடிவி தினகரன்-ஜெயக்குமார் குற்றச்சாட்டு

 

இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய ஆடியோ; பின்னணியில் டிடிவி தினகரன்-ஜெயக்குமார் குற்றச்சாட்டு

ஆடியோ விவகாரத்தின் பின்னணியில் சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தினர் இருக்கின்றனர் என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை: ஆடியோ விவகாரத்தின் பின்னணியில் சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தினர் இருக்கின்றனர் என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஒரு பெண்ணை கர்ப்பமாக்கி ஆண் குழந்தைக்கு தந்தையாகி இருக்கிறார் என ஆடியோவும், அதுகுறித்த பிறப்பு சான்றிதழும் வெளியாகி இணையத்தில் வைரலாகி இருக்கிறது. மேலும் இந்த ஆடியோ உண்மையெனில் உடனடியாக அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்க ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், என்னை நேரடியாக எதிர்க்க திராணி இல்லாமல் ஆடியோ மார்பிங் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்களோ அவர்கள் சட்டத்தின் முன் பதில் சொல்லியாக வேண்டும். இதனை ஒரு கூட்டம்தான் திட்டமிட்டு செய்துள்ளது. அந்த கூட்டத்திற்கு பிராடுத்தனம் செய்வது கைவந்த கலை.

நான் சசிகலா மற்றும் தினகரனின் குடும்பத்தை தீவிரமாக எதிர்த்து வருகிறேன். எனவே இந்த ஆடியோ விவகாரம் பின்னால் அவர்கள்தான் இருக்கிறார்கள். எனது பெயர் தாங்கி வந்த பிறப்பு சான்றிதழ் போலியானது. உலகத்தில் டி.ஜெயக்குமார் என்று நான் ஒருவன் மட்டும்தான் இருக்கிறேனா? இதுகுறித்து சட்டப்படி வழக்கு தொடரப்படும். நான் இதுபோல் பேசவே இல்லை. களங்கம் ஏற்படுத்த திட்டமிட்டு சதி தீட்டப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் குரல் பரிசோதனை உட்பட எந்த பரிசோதனைக்கும் தயாராக இருக்கிறேன். இது போன்ற கிரிமினல் வேலைகள் செய்ய தினகரனுக்கு நிகர் தினகரன்தான் என்றார்.