இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய நபர் கைது: அதிர்ச்சி தரும் சம்பவம்!

 

இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய நபர் கைது: அதிர்ச்சி தரும் சம்பவம்!

பயிற்சிக்கு வந்த இளம்பெண்ணை  ஆபாசப் படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம்: பயிற்சிக்கு வந்த இளம்பெண்ணை  ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னையை அடுத்த தாம்பரம் சேலையூர் கேம்ப் ரோடு 100 அடி சாலையில் தனியார் கன்சல்டிங் நிறுவனத்தை கார்த்திக்ராஜா என்பவர் நடத்தி வந்துள்ளார். இந்நிறுவனம் மூலம் வெளிநாடுகளில் வேலை வாங்கித் தரவும் நிறுவனங்களில் வேலை செய்ய பயிற்சியும் அளிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிறுவனத்தில் திருச்சி ஓலையூர் கே.கே நகரை சேர்ந்த ரம்யா என்ற பி.இ பட்டதாரிப் பெண் பயிற்சியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சேர்ந்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு  குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ஆபாசமாக படம் எடுத்த கார்த்திக்ராஜா, அதை இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி பணம் கேட்டு வந்துள்ளார்.

இது தொடர்பாக ரம்யா சேலையூர் போலீசில் புகார் அளித்ததையடுத்து, சேலையூர் போலீசார் பெண்கள் மீதான வன்கொடுமை சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கார்த்திக்ராஜவை கைது செய்தனர்.பின்னர்  அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு  புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.