இலவச திருக்குறள் புத்தகங்கள்…திருவள்ளுவர் தினத்தை கொண்டாடிய டீக்கடை நண்பர்கள்!

 

இலவச திருக்குறள் புத்தகங்கள்…திருவள்ளுவர் தினத்தை கொண்டாடிய  டீக்கடை நண்பர்கள்!

இதனால் அப்பகுதிவாசிகள்  சீனிவாசன் மற்றும்  சத்யா அடைக்கலம் இருவரையும் பாராட்டி வருகின்றனர். 

புதுக்கோட்டை மாவட்டம் மறமடக்கி அருகே உள்ள  சிட்டங்காடு கிராமத்தை  சேர்ந்தவர்கள் சீனிவாசன் மற்றும்  சத்யா அடைக்கலம். நண்பர்களான இவர்களில் சத்யா அதேபகுதியில்  டீ கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

ttn

இந்நிலையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நண்பர்கள் இருவரும் இணைந்து புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளனர். அதாவது  அப்பகுதியை சேர்ந்த சிறுவர்களுக்குத் திருக்குறள் புத்தகமும்,  அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மரக்கன்றுகளும் வழங்கினர்.

ttn

மேலும் சத்யா அடைக்கலம் தனது கடையில் டீ குடிக்க வரும் வாடிக்கையாளர்களுக்கு  ஒரு ரூபாய்க்கு டீ கொடுத்து திருவள்ளுவர் தினத்தை கொண்டாடினார். இதனால் அப்பகுதிவாசிகள்  சீனிவாசன் மற்றும்  சத்யா அடைக்கலம் இருவரையும் பாராட்டி வருகின்றனர்.