இலவசமாக குடிநீரை வழங்கிவிட்டு அராஜகம் செய்த ரஜினி மக்கள் மன்றத்தினர்!

 

இலவசமாக குடிநீரை வழங்கிவிட்டு அராஜகம் செய்த ரஜினி மக்கள் மன்றத்தினர்!

ராமநாதபுரம் மாவட்டம்  சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பொது மக்களுக்கு இலவசமாக குடிநீர் விநியோகம் செய்யபட்டது.

ராமநாதபுரம் மாவட்டம்  சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பொது மக்களுக்கு இலவசமாக குடிநீர் விநியோகம் செய்யபட்டது.

தாங்கள் பொது மக்களுக்கு சேவை செய்ய ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை மற்ற அரசியல்வாதிகளை போல போட்டோவிற்கு போஸ் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று கூறிய ரசிகர் மன்றத்தினர், பொது மக்களுக்கு குடிநீரை இலவசமாக விநியோகித்த பின்னர் மற்ற அரசியல் கட்சியினரை போன்று இவர்களும் ரஜினியின் பாபா முத்திரை விரல்களை தண்ணீர் பிடித்த பெண்களை காண்பிக்குமாறு வலியுறுத்தினா். 

ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது கடும் வறட்சியின் காரணமாக பொது மக்கள் குடிநீர் இன்றி பரிதவித்து வருகின்றனர். இதனால் பொது மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தனியாரிடம் ஒரு குடம் தண்ணீரை ரூபாய் 10க்கும் விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்திய ராமநாதபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம்  ரசிகர்கள் நிர்வாகிகள், மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொது மக்களுக்கு குடிநீரை டிராக்டர்கள் மூலமாக இலவசமாக விநியோகித்து வருகின்றனர். பின்னர் ரஜினியின் பாபா முத்திரை விரல்களை தண்ணீர் பிடித்த பெண்களை காண்பிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். பின்னர் தாங்களுக்கு குடிநீர் எப்போது வேண்டுமானாலும் தன்னையும் ரசிகர் மன்றத்தினரை தொடர்பு கொள்ளுமாறு  சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.