இலங்கை குண்டுவெடிப்பு: மனதை உருக்க வைக்கும் ரஜினி, கமல் ட்வீட்!
இலங்கையில் நடந்த கொடூர தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறியுள்ளார்.
கொழும்பு: இலங்கையில் நடந்த கொடூர தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறியுள்ளார்.
ஈஸ்டர் பண்டிகையான நேற்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பிரார்த்தனைகள் நடைபெற்று வந்தன. அப்போது விஷமிகளின் திட்டமிட்ட தாக்குதலால் இலங்கையில் நட்சத்திர ஹோட்டல், தேவாலயங்கள் உள்ளிட்ட 6 இடங்களில் நேற்று காலை 8.45 மணிக்கு தொடர் குண்டு வெடிப்பு அரங்கேறியது. அதில் 300ற்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 500ற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் குறித்து நடிகர் ரஜினிகாந்த், தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ ஈஸ்டர் திருநாளான்று இலங்கையில் நடந்த இந்த துயரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.
இதே போல் நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல் ஹாசன், வன்முறை ஒருபோதும் மனித முரண்பாடுகளுக்கு இறுதி தீர்வு அல்ல. ஸ்ரீலங்காவில் குண்டுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நீதி வழங்குவதில் அரசாங்கம் பாரபட்சமற்ற மற்றும் விரைவானதாக இருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் மட்டுமின்றி இலங்கையின் மீதான தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்க: என்னுடன் நடித்தால் மரணமா? சென்டிமென்டில் தாக்கிய பிரியா ஆனந்த்! ஜகா வாங்கிய நெட்டிசன்!