இலங்கையில் சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் என அறிவிப்பு… மோடி தலையிட ஸ்டாலின் வலியுறுத்தல்!

 

இலங்கையில் சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் என அறிவிப்பு… மோடி தலையிட ஸ்டாலின் வலியுறுத்தல்!

இலங்கையில் புதிதாக பதவிக்கு வந்துள்ள அரசு, சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புதிதாக பதவிக்கு வந்துள்ள அரசு, சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் இன்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“இலங்கை அரசு இலங்கை சுதந்திர தினத்தின்போது சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என்று முடிவு செய்திருப்பது அதிருப்தியை அளிக்கிறது. இதுபோன்ற பேரினவாதம் இலங்கைத் தமிழர்களை மேலும் ஒதுக்கிவைக்கும். எனவே, இந்திய பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.