இறைவா, முதியவர்களிடமிருந்து எங்களை காப்பாற்று, வயசுப்பசங்களை நாங்க பாத்துக்குறோம்!

 

இறைவா, முதியவர்களிடமிருந்து எங்களை காப்பாற்று, வயசுப்பசங்களை நாங்க பாத்துக்குறோம்!

பெட்டியில் உள்ள புகார்கள் ஆராய்ந்து பார்க்கப்பட்டதில், பல மாணவிகள் சிறு வயது முதல் தற்போது வரை பாலியல் ரீதியாக ஏற்பட்ட பாதிப்புகளை கூறியிருந்தனர். மேலும் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் மூலமாக மட்டுமல்லாது, முதியவர்கள் மூலமாகத்தான் அதிகம் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகியதாக தெரிவித்து மனக்குமுறலை வெளிப்படுத்தி இருந்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து, சட்டக்கல்லூரி மாணவிகள் 75 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து விளக்கி கூறப்பட்டது. பின்னர், இந்த சட்டக்கல்லூரி மாணவிகள்மூலம் மாவட்டத்தில் ஒரே நாளில் 14 மகளிர் பள்ளிகளில் 10,000-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. போக்சோ சட்டம் குறித்தும், பாலியல் தொல்லையில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்தும், பாதிப்பு ஏற்பட்டால் தைரியமாக வெளியில் சொல்லும் முறை குறித்தும் மாணவிகளுக்கு எடுத்துசொல்லப்பட்டது.

Elderly, more dangerous

முத்தாய்ப்பாக, மாணவிகளுக்கு ஏற்பட்ட பாலியல் பாதிப்புகள் குறித்து கருத்துக்களை தெரிவிக்க ரகசிய புகார் பெட்டி வைக்கப்பட்டது. புகார் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்ற உறுதி அளிக்கப்பட்டதால் மாணவிகள் தங்கள் மனக்குமுறலை எழுதி ரகசிய புகார் பெட்டியில் போட்டனர். பெட்டியில் உள்ள புகார்கள் ஆராய்ந்து பார்க்கப்பட்டதில், பல மாணவிகள் சிறு வயது முதல் தற்போது வரை பாலியல் ரீதியாக ஏற்பட்ட பாதிப்புகளை கூறியிருந்தனர். மேலும் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் மூலமாக மட்டுமல்லாது, முதியவர்கள் மூலமாகத்தான் அதிகம் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகியதாக தெரிவித்து மனக்குமுறலை வெளிப்படுத்தி இருந்தனர்.