இறந்த மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சின்னக்குயில் சித்ரா: நெகிழ்ச்சியான பதிவு!
பிரபல பின்னணி பாடகி சித்ரா தனது மகளின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது ரசிகர்களை சோகமடைய செய்துள்ளது.
சென்னை: பிரபல பின்னணி பாடகி சித்ரா தனது மகளின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது ரசிகர்களை சோகமடைய செய்துள்ளது.
சின்னக்குயில் சித்ரா என்று அன்பால் அழைக்கப்படும் கே.எஸ்.சித்ரா தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 25,000க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். பாடகி சித்ரா-விஜயசங்கர் தம்பதிக்கு பிறந்த ஒரே மகளான நந்தனா ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர். இவர் கடந்த 2011ம் ஆண்டு துபாயில் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.மகளின் பிரிவால் மிகவும் வருந்திய சித்ரா, அவரது நினைவாக பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் இன்று அவரது மகள் நந்தனாவின் பிறந்த நாளை அடுத்து சித்ரா தனது சமூக வலைத்தளத்தில், ‘பிறந்த நாள் வாழ்த்துக்கள் நந்தனா! நீங்கள் எங்கள் வாழ்வில் ஒரு பொக்கிஷம். சொர்க்கத்தில் இருக்கும் எங்கள் தேவதை, எங்களுடைய வாழ்வை இனிமையாக மாற்றி வருகிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
An angel from heaven has transformed our life into a fairy tale. You are the treasure &the best thing that happened in our life. Happy birthday dear Nandana. pic.twitter.com/ZvdS6GipH6
— K S Chithra (@KSChithra) December 18, 2018
பாடகி சித்ராவின் இந்த நெகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்து அவரது ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக சித்ரா தனது மகளின் நினைவாக கேரளாவில் பருமுலா பகுதியில் உள்ள புனித கிரிகோரியஸ் கேன்சர் மருத்துவமனைக்கு இலவசமாக கீமோ தெரப்பி சிகிச்சை பிரிவை கட்டிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.