இறந்த பிறகும் விருதுக்கு தேர்வான ஸ்ரீதேவி! 

 

இறந்த பிறகும் விருதுக்கு தேர்வான ஸ்ரீதேவி! 

நடிகர் நாகார்ஜுனா தனது தந்தையும் ஆந்திராவின் புகழ்பெற்ற நடிகரும் தயாரிப்பாளருமான மறைந்த அக்கினேனி நாகேஸ்வரராவ் பெயரில் தனது குடும்பத்தாருடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் திரைத்துறையில் நீண்ட பங்களிப்பு செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகின்றார்.

நடிகர் நாகார்ஜுனா தனது தந்தையும் ஆந்திராவின் புகழ்பெற்ற நடிகரும் தயாரிப்பாளருமான மறைந்த அக்கினேனி நாகேஸ்வரராவ் பெயரில் தனது குடும்பத்தாருடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் திரைத்துறையில் நீண்ட பங்களிப்பு செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகின்றார். கலை, கலாச்சாரம் மற்றும் வியாபார ரீதியில் சினிமாவில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய கலைஞர்களுக்கு இந்த விருது கொடுக்கப்படுகிறது.

sridevi

இந்நிலையில் பாலிவுட் நடிகைகள் ரேகா மற்றும் மறைந்த ஸ்ரீதேவி ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான நாகேஸ்வரராவ் விருது வழங்கப்படுவதாக தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா தெரிவித்துள்ளார். 2005ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுவரும் இந்த விருதுகளை தேவ் ஆனந்த், ஷபனா ஆஸ்மி, அஞ்சலி தேவி, வைஜெயந்தி மாலா, லதா மங்கேஷ்கர், கே.பாலசந்தர், ஹேமமாலினி, ஷ்யாம் பெனகல் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் இதுவரை பெற்றுள்ளனர்.