இரவில் ஹெல்மெட் மற்றும் பர்தா அணிந்து கொண்டு ஏடிஎம்- இல் நின்றிருந்த உருவம் : போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

 

இரவில் ஹெல்மெட் மற்றும் பர்தா அணிந்து கொண்டு ஏடிஎம்- இல் நின்றிருந்த உருவம் : போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

வேளச்சேரியில் கடந்த 1 ஆம் தேதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

சென்னை:  ஹெல்மெட்  போட்ட படியும் பர்தா அணிந்து கொண்டும் ஒருவர் பணம் எடுக்க முயற்சித்து கையும் களவுமாகச் சிக்கிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 

theft

வேளச்சேரியில் கடந்த 1 ஆம் தேதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஏடிஎம் ஒன்றில் ஹெல்மெட் போட்டபடியும் பர்தா அணிந்து கொண்டும் இருந்தார். அதைப் பார்த்து ‘யாருப்பா .. அங்க ஏன் எங்கே நிக்கறீங்க?? என்று கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. இதையடுத்து போலீசார் அவரை நோக்கி செல்ல, பர்தா அணிந்த அந்த நபர் தலைதெறிக்க ஓடியுள்ளார். பிறகு தான் பர்தா அணிந்திருந்தது பெண் அல்ல ஆண் என்பது தெரிந்தது.  

arrested

அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் வந்தவாசியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பது தெரியவந்தது. ராஜ்குமார் சென்னை வேளச்சேரியில் வெல்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தோள்பட்டையில் அடிபட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பணத்திற்காக ஏடிஎம், வீடு போன்ற இடங்களில் திருட முடிவெடுத்துள்ளார். இதனால் அடையாளம் தெரியக் கூடாது என்று இரவு நேரங்களில் பர்தா அணிந்து கொண்டும், பெண் போல ஹெல்மெட் அணிந்து கொண்டும் திருட முயன்றுள்ளார். அப்போது தான் ரோந்து பணியிலிருந்த போலீசாரிடம் ராஜ்குமார் சிக்கியுள்ளார்.