இரண்டாவது திருமணத்திற்கு ஒப்புக்கொண்டது எப்படி? சரவணனின் முதல் மனைவி! இரண்டாவது திருமணத்திற்கு ஒப்புக்கொண்டது எப்படி? சரவணனின் முதல் மனைவி!

 

இரண்டாவது திருமணத்திற்கு ஒப்புக்கொண்டது எப்படி? சரவணனின் முதல் மனைவி! இரண்டாவது திருமணத்திற்கு ஒப்புக்கொண்டது எப்படி? சரவணனின் முதல் மனைவி!

எல்லா மருத்துவ சிகிச்சை மேற்கொண்டும் குழந்தைப்பேறு இல்லாததால் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று தாங்கள் முடிவு செய்ததாகவும், ஆனால் பெற்றோரின் வற்புறுத்தல் தொடர்ந்ததால், வேறு வழியின்றி தானும் அவருடைய இரண்டாம் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டதாகவும், தாமே திருமணத்தை நடத்தி வைத்ததாகவும் கூறி ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார் சூர்யஸ்ரீ!

பிக் பாஸ் வீட்டுக்குள் ஒவ்வொருவரின் சென்டிமென்ட் எப்பிசோடில், நடிகர் சரவணன் தன் வாழ்வின் கடினமான பாதையை கடந்துவந்ததை உணர்ச்சிப்பூர்வமாக கூறினார். அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்ற சூர்யஸ்ரீயை,  பெற்றோர் விருப்பத்தை மீறி திருமணம் செய்துகொண்டது, திருமணமான பின் நீண்ட வருடங்களுக்கு குழந்தை இல்லாமல் தவித்தது, பெற்றோர் வற்புறுத்தலால் இரண்டாம் திருமணத்திற்கு ஏற்பாடானது, பின்னர் சூர்யஸ்ரீயே திருமணத்தை நடத்தி வைத்தது என கண்கலங்க கூறினார்.

Saravanan, big boss contestant

இதுகுறித்து சரவணனின் முதல் மனைவியான சூர்யாஸ்ரீயிடம் இந்தியா க்ளிட்ஸ் வெப்சைட் பிரத்யேக பேட்டி கண்டது. “குழந்தை இல்லாததை காரணம் காட்டி, சரவணனின் தாயார் அவரை இரண்டாம் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதாகவும், எல்லா மருத்துவ சிகிச்சை மேற்கொண்டும் குழந்தைப்பேறு இல்லாததால் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று தாங்கள் முடிவு செய்ததாகவும், ஆனால் பெற்றோரின் வற்புறுத்தல் தொடர்ந்ததால், வேறு வழியின்றி தானும் அவருடைய இரண்டாம் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டதாகவும், தாமே திருமணத்தை நடத்தி வைத்ததாகவும் கூறி ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார் சூர்யஸ்ரீ! மேலும், பிக் பாஸ் வீட்டிலிருந்து முதலாவது நபராக வெளியேற்றப்படலாம் என சூர்யஸ்ரீ நினைப்பது மீராவையாம்!