இயக்குனர் ஷங்கரின் ‘சிட்டி’ ரோபோவைப் போலவே உங்களுக்காக ரெடி… சாம்சங் செய்யும் அட்ராசிட்டி..!?
டெக்னாலஜி முன்னேற்றம் என்பது இப்போது அபரிவிதமாய் வளர்ந்துவிட்டது,புதுவகையான காட்ஜெட்டுகள் ஆகியவையை உருவாக்குதலிலும்,சந்தைகளில் விற்பனை செய்வதிலும் இப்போது சாம்சங் நிறுவனம் முன்னணியில் நிற்கிறது.இப்போது அந்நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பான உணர்ச்சிகளைக்கொண்ட செயற்கை மனிதர்களை உருவாக்கும் புதிய களத்தில் இறங்கியுள்ளது
டெக்னாலஜி முன்னேற்றம் என்பது இப்போது அபரிவிதமாய் வளர்ந்துவிட்டது,புதுவகையான காட்ஜெட்டுகள் ஆகியவையை உருவாக்குதலிலும்,சந்தைகளில் விற்பனை செய்வதிலும் இப்போது சாம்சங் நிறுவனம் முன்னணியில் நிற்கிறது.இப்போது அந்நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பான உணர்ச்சிகளைக்கொண்ட செயற்கை மனிதர்களை உருவாக்கும் புதிய களத்தில் இறங்கியுள்ளது.
மேலைநாடுகளில், ஒரு குறிப்பிட்ட வயதை எட்டியதும் அவர்களுக்கு ஒருவித தனிமை உணர்வு உண்டாகிறது… இதனை போக்க அந்நாடுகளில் ஒரு கால் செண்டரையும் வைத்து அப்படி தனிமையாக உணருபவர்களுக்கு ஒரு பேச்சு துணையாக இருப்பதற்கு மனிதர்களை அனுப்புவர் ஆனால் நம் நாட்டில் இன்னும் அப்படிப்பட்ட செயல்முறை எதுவும் இல்லை அதை எதிர்காலத்தில் பூர்த்திசெய்வதற்கு இப்போது சாம்சங் நிறுவனம் புதிய செயற்கை மனிதர்களை உருவாக்கியுள்ளது.
சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட் ஹப் Artificial Intelligence பிரிட்ஜை இந்த மாதம் 7ஆம் தேதி லாஸ் வெகாஸில் நடக்கும் CES 2020 யில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது இதே போல இப்போதும் தனது புதிய முயற்சியான உணற்சிகளைக்கொண்ட மனிதர்களை உருவாக்கி இந்த CES 2020யில் அறிமுகப்படுத்தவுள்ளது.
CES 2020 என்பது புதிய கண்டுபிடிப்புகளையும்,தொழிலில் புதிய மைல்கல்லை எட்டிய சாதனையாளர்களுக்கு புதிய சாதனை சிந்தனையாளர்களையும் ஊக்குவிக்கும் ஒரு உலக மேடையாகும் இதில் புதிய கண்டுபிடிப்புகளையும் தங்கள் சாதனை படைப்புகளையும் இங்கு காட்சிப்படுத்தலாம்.இப்படி இருக்க சாம்சங் நிறுவனம் தனது புதிய கண்டுபிடிப்பான உணர்ச்சிகளை கொண்ட செயற்கை மனிதர்களை இதில் காட்சி படுத்த உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் ஸ்டார் லேபின் நியான் (NEON) எனப்படும் செயற்கை மனிதர்களை அறிமுக படுத்தப்போகிறது.இந்த பெயர் காரணம் நியோ(NEO) -புதிய + ஹியூமன்(humaN) = NEON என்று விளக்கம் தருகிறார்கள். இதனை உருவாக்கியுள்ள ஸ்டார் லேப் எதிர்காலத்தை மனதிற் கொண்டு உருவாக்கியுள்ளது.இவை, மனிதர்களைப்போலவே இயங்கக்கூடியவை மனிதர்களின் சிந்தனைகளும்,செயல்களையும் இதற்கு பொருத்தப்பட்டுள்ள R3(Reality,Realtime,Responsive) எனப்படும் டெக்னாலஜி உள்ளது.மேலும் இதில் பொருத்தப்பட்டுள்ள CORE R3 என்பது இயற்கையின் சிக்கல்கள்,மனிதர்கள் எவ்வாறு தோற்றமளிக்கிறார்கள்,நடந்துகொள்கிறார்கள் மற்றும் அவர்களின் தொடர்பு முறை ஆகியவைகளின் செயல்கள் எல்லாம் விரிவாக புகுத்தப்பட்டுள்ளது.
இதைப்பற்றி ஸ்டார் லேப் தரப்பில் கூறப்பட்டது,”CORE R3 என்பது மனிதர்களின் சிந்தனைகளையும்,இந்த கம்ப்யூட்டர் முறை இயல்பான வாழ்நாள் யதார்த்தத்தையும் பிரிக்க முடியாத அளவிற்கு இந்த செயற்கை மனிதர்களை உருவாக்கியுள்ளோம்,NEON கள் சில மில்லி வினாடிகளில் பதிலும்,செயலாற்றும் திறனும் கொண்டுள்ளது” என கூறியது.
இந்த நியான்கள் அவனுக்கு/அவளுக்கென தனி பிரத்யேக வித்தியாசத்தை தக்கவைத்தும், புதிய செயல்களையும், உணர்ச்சிகளையும், அசைவுகளையும், பேசும் திறனையும் கொண்டுள்ளது. ஸ்டார் லேப்ஸின் சீஇஓவும் தலைவருமான பிரணவ் மிஸ்ட்ரி கூறியதாவது,”நியான் இப்போதுள்ள புதிய பரபரப்பான வாழ்க்கை சூழலில் இவை நமக்கு நண்பர்களாக, துணையாக, கலந்துரையாட, என மனிதர்கள் போலவே செயல்படும்.தவிர, இவை தொடர்ந்து புதியவைகளை படித்தும்,உருவாக்கம் அடைந்து அவைகளின் செயல்களை பின்பற்றி அனுபங்களையும் பெற்றுக்கொள்ளும்.
இவைகளை எல்லாம் நாம் சயின்ஸ் பிக்ஷன்களிலும்,படங்களிலுமே பார்த்து கனவு கண்டிருப்போம்” இவ்வாறு அவர் நியானை பற்றி கூறினார்.ஆனால் இனி கனவல்ல நிஜத்திலேயே இப்படிப்பட்ட செயற்கை மனிதர்கள் எதிர்காலத்தில் வரவிருக்கிறது.
டெக்னாலஜி முன்னேற்றம் என்பது இப்போது அபரிவிதமாய் வளர்ந்துவிட்டது,புதுவகையான காட்ஜெட்டுகள் ஆகியவையை உருவாக்குதலிலும்,சந்தைகளில் விற்பனை செய்வதிலும் இப்போது சாம்சங் நிறுவனம் முன்னணியில் நிற்கிறது.இப்போது அந்நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பான உணர்ச்சிகளைக்கொண்ட செயற்கை மனிதர்களை உருவாக்கும் புதிய களத்தில் இறங்கியுள்ளது.
மேலைநாடுகளில், ஒரு குறிப்பிட்ட வயதை எட்டியதும் அவர்களுக்கு ஒருவித தனிமை உணர்வு உண்டாகிறது… இதனை போக்க அந்நாடுகளில் ஒரு கால் செண்டரையும் வைத்து அப்படி தனிமையாக உணருபவர்களுக்கு ஒரு பேச்சு துணையாக இருப்பதற்கு மனிதர்களை அனுப்புவர் ஆனால் நம் நாட்டில் இன்னும் அப்படிப்பட்ட செயல்முறை எதுவும் இல்லை அதை எதிர்காலத்தில் பூர்த்திசெய்வதற்கு இப்போது சாம்சங் நிறுவனம் புதிய செயற்கை மனிதர்களை உருவாக்கியுள்ளது.
சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட் ஹப் Artificial Intelligence பிரிட்ஜை இந்த மாதம் 7ஆம் தேதி லாஸ் வெகாஸில் நடக்கும் CES 2020 யில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது இதே போல இப்போதும் தனது புதிய முயற்சியான உணற்சிகளைக்கொண்ட மனிதர்களை உருவாக்கி இந்த CES 2020யில் அறிமுகப்படுத்தவுள்ளது.
CES 2020 என்பது புதிய கண்டுபிடிப்புகளையும்,தொழிலில் புதிய மைல்கல்லை எட்டிய சாதனையாளர்களுக்கு புதிய சாதனை சிந்தனையாளர்களையும் ஊக்குவிக்கும் ஒரு உலக மேடையாகும் இதில் புதிய கண்டுபிடிப்புகளையும் தங்கள் சாதனை படைப்புகளையும் இங்கு காட்சிப்படுத்தலாம்.இப்படி இருக்க சாம்சங் நிறுவனம் தனது புதிய கண்டுபிடிப்பான உணர்ச்சிகளை கொண்ட செயற்கை மனிதர்களை இதில் காட்சி படுத்த உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் ஸ்டார் லேபின் நியான் (NEON) எனப்படும் செயற்கை மனிதர்களை அறிமுக படுத்தப்போகிறது.இந்த பெயர் காரணம் நியோ(NEO) -புதிய + ஹியூமன்(humaN) = NEON என்று விளக்கம் தருகிறார்கள். இதனை உருவாக்கியுள்ள ஸ்டார் லேப் எதிர்காலத்தை மனதிற் கொண்டு உருவாக்கியுள்ளது.இவை, மனிதர்களைப்போலவே இயங்கக்கூடியவை மனிதர்களின் சிந்தனைகளும்,செயல்களையும் இதற்கு பொருத்தப்பட்டுள்ள R3(Reality,Realtime,Responsive) எனப்படும் டெக்னாலஜி உள்ளது.மேலும் இதில் பொருத்தப்பட்டுள்ள CORE R3 என்பது இயற்கையின் சிக்கல்கள்,மனிதர்கள் எவ்வாறு தோற்றமளிக்கிறார்கள்,நடந்துகொள்கிறார்கள் மற்றும் அவர்களின் தொடர்பு முறை ஆகியவைகளின் செயல்கள் எல்லாம் விரிவாக புகுத்தப்பட்டுள்ளது.
இதைப்பற்றி ஸ்டார் லேப் தரப்பில் கூறப்பட்டது,”CORE R3 என்பது மனிதர்களின் சிந்தனைகளையும்,இந்த கம்ப்யூட்டர் முறை இயல்பான வாழ்நாள் யதார்த்தத்தையும் பிரிக்க முடியாத அளவிற்கு இந்த செயற்கை மனிதர்களை உருவாக்கியுள்ளோம்,NEON கள் சில மில்லி வினாடிகளில் பதிலும்,செயலாற்றும் திறனும் கொண்டுள்ளது” என கூறியது.
இந்த நியான்கள் அவனுக்கு/அவளுக்கென தனி பிரத்யேக வித்தியாசத்தை தக்கவைத்தும், புதிய செயல்களையும், உணர்ச்சிகளையும், அசைவுகளையும், பேசும் திறனையும் கொண்டுள்ளது. ஸ்டார் லேப்ஸின் சீஇஓவும் தலைவருமான பிரணவ் மிஸ்ட்ரி கூறியதாவது,”நியான் இப்போதுள்ள புதிய பரபரப்பான வாழ்க்கை சூழலில் இவை நமக்கு நண்பர்களாக, துணையாக, கலந்துரையாட, என மனிதர்கள் போலவே செயல்படும்.தவிர, இவை தொடர்ந்து புதியவைகளை படித்தும்,உருவாக்கம் அடைந்து அவைகளின் செயல்களை பின்பற்றி அனுபங்களையும் பெற்றுக்கொள்ளும்.
இவைகளை எல்லாம் நாம் சயின்ஸ் பிக்ஷன்களிலும்,படங்களிலுமே பார்த்து கனவு கண்டிருப்போம்” இவ்வாறு அவர் நியானை பற்றி கூறினார்.ஆனால் இனி கனவல்ல நிஜத்திலேயே இப்படிப்பட்ட செயற்கை மனிதர்கள் எதிர்காலத்தில் வரவிருக்கிறது.