இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் ஆசையில் மண்ணள்ளிப்போட்ட ஹாலிவுட் நடிகர்…!
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தர்பார் படத்தை தொடர்ந்து அடுத்து ஒரு ஹாலிவுட் படத்தை இயக்கப்போவதாகப் பிரபல ஹாலிவுட் நடிகர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தர்பார் படத்தை தொடர்ந்து அடுத்து ஒரு ஹாலிவுட் படத்தை இயக்கப்போவதாகப் பிரபல ஹாலிவுட் நடிகர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ரஜினிகாந்த்- ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகிவரும் தர்பார் படத்தின் படப்பிடிப்புகடந்த மாதம் மும்பையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் முடிவடைந்து பொங்கலன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு ஏ.ஆர். முருகதாஸ் தமிழில் வலம் வர விரும்பாமல் ஹாலிவுட்டில் கால்பதிக்கத் திட்டமிட்டுள்ளார். இது பற்றி உரிய நேரத்தில் அறிவிக்கலாம் என்று நினைத்திருந்த முருகதாஸுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் பிரபல நடிகர் ஒருவர்.அதில் தெலுங்குத் திரையுலகின் டாப் ஸ்டாரான நடிகர் மகேஷ் பாபு நடிக்கவிருக்கிறார்.
@directorvamshi @urstrulyMahesh When you come to #LosAngeles, Stop by #DTLA for Lunch to discuss collaborating on International #SpyMovie
— Bill Duke (@RealBillDuke) April 27, 2019
‘கமாண்டோ’, ‘ப்ரிடேட்டர்’,பேர்ட் ஆன் வயர்’ உட்பட மொத்தம் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் ‘பில் டுக்’ தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது ‘இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் மகேஷ் பாபு அவர்களை அடுத்த முறை லாஸ் ஏஞ்சல்ஸ் வரும் போது லஞ்சுக்கு வாருங்கள். நமது சர்வதேச புராஜக்ட் பற்றிப் பேசி முடிவெடுத்துவிடலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் நடிகர் மகேஷ் பாபுவின் ‘மக்ரிஷி’ படம் வரும் 9-ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் அடுத்து அனில் ரவிபுடியின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளர்.அது முடிந்த பிறகு மகேஷ் பாபவும், முருகதாஸ் போலவே அடுத்த ஜனவரியில் ஹாலிவுட் படத்துக்குத் தயாராகிவிடுவார் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.
முன்னதாக ஏ.ஆர். முருகதாஸ்-மகேஷ் பாபு காம்போவில் ஸ்பைடர் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது