இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்!

 

இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்!

தமிழ் திரையுலகில் மறக்க முடியாத உதிரிப்பூக்கள் திரைப்படம் தமிழ் திரையுலக வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது

சென்னை: பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகருமான மகேந்திரன் மறைவுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் மறக்க முடியாத உதிரிப்பூக்கள் திரைப்படம் தமிழ் திரையுலக வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அந்த படத்தை இயக்கிய மகேந்திரன், கடந்த சில நாட்களுக்கு முன் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

mahendran

தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 79. மகேந்திரனின் உடல் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதி சடங்கு இன்று மாலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜானி, உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், மெட்டி என பல வெற்றி படங்களை உணர்வு பூர்வமாக கொடுத்த மகேந்திரன், தங்கப்பதக்கம், ரிஷிமூலம், காளி, கள்ளழகர் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே திரைப்படம் 3 தேசிய விருதுகளை பெற்றுள்ளது.

இயக்குனர் மக்கேந்திரனின் மறைவு திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகினர், முன்னணி இயக்குனர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட ஏராளமானோர் அவருக்கு தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், மகேந்திரன் மறைவுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்த்திரையுலகின் புகழ் பெற்ற இயக்குநரும், வசன கர்த்தாவுமான திரு.மகேந்திரன் மறைந்த  தகவலறிந்து வருத்தமுற்றேன். மனித மனங்களின் உணர்வுகளை, வாழ்வின் அழகியலை நுட்பமாக காட்சிப்படுத்தும் திரைச்சித்திரங்களைத் தந்தவர் மகேந்திரன்.

தமிழின் முக்கியமான படங்களில் ஒன்றாக, அவரது உதிரிப்பூக்கள் படம் கொண்டாடப்படுகிறது. தனிப்பட்ட முறையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மீது அவர் கொண்டிருந்த நேசத்தைப் பல முறை பதிவு செய்திருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், தமிழ்த் திரையுலகிற்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

இதையும் வாசிங்க

தமிழ் சினிமாவுக்கு கை கொடுத்த கை; மகேந்திரன் மறைவு: பிரபலங்கள் இரங்கல்