இமாச்சலில் கடும் பனிப்பொழிவால் முடங்கியுள்ள போக்குவரத்து !

 

இமாச்சலில் கடும் பனிப்பொழிவால் முடங்கியுள்ள போக்குவரத்து !

இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குளிர்காலம் தொடங்கியதால் வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

himacha

அம்மாநிலத்தில் உள்ள  கிண்ணார் மாவட்டத்தின் ரோக்கோங் பியோ என்னும் பகுதிகளில் உள்ள வீட்டின் கூரைகள் பனிப்பொழிவில் முழுவதுமாக மூடிக் காணப்படுகின்றன. மக்கள் வீட்டிலிருந்தே வெளியே வர முடியாததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

himachal

அதே போன்று, சில்லா மாவட்டத்திலும் கடும் பனிப்பொழிவின் காரணமாகச் சாலைகளில் 2 மீட்டர் அளவிற்குப் பனி மூடியுள்ளது. இதனால் போக்குவரத்து சேவை முற்றிலுமாக முடங்கியுள்ளது. மக்கள் வேலைகளுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், அப்பகுதிகளில் விமானச் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.