இப்படியும் மனிதர்கள் பூமியில் உயிர்வாழ்கிறார்களா? வீசும் காற்றில் விஷம் பரவட்டும்!

 

இப்படியும் மனிதர்கள் பூமியில் உயிர்வாழ்கிறார்களா? வீசும் காற்றில் விஷம் பரவட்டும்!

அந்த மதுக்கடையில் இருந்தவர்களுக்கு பிள்ளை கறி என்றாலும் வாங்கி தின்பார்கள் போல. குழந்தையை 1000 ரூபாய்க்கு வாங்கிக்கொண்டு, பாட்டிலை கொடுத்திருக்கிறார்கள்.

மது முதலில் மதிமயக்கும் பின் மதிய‌ழிக்கும். இப்படியும் ஒரு மனிதனால் யோசிக்க முடியுமா என்கிற கீழ்நிலைக்கு அவனைத் தள்ளும். அப்படிப்பட்ட ஒரு ஈனப்பிறவி செய்த காரியத்தைப் பாருங்கள். கணவன் மனைவி இருவரும் கைக்குழந்தையோடு கோவிலுக்குப் போயிருக்கிறார்கள். போகிற வழியில் மதுக்கடையைக் கண்ட கணவனுக்கு மதி மயங்குகிறது. எனக்கு இப்பவே சரக்கு வேணும் என மனைவியோடு மல்லுகட்ட, வெறுத்துப்போன மனைவி, போ போய் குடிச்சிட்டு இங்கேயே கிட என கிளம்ப பார்க்கிறாள்.

Alcohol

மனைவி வழியை மறிக்கும் கணவன், குடிக்கிறதுக்கு உங்கிட்ட நான் பர்மிசன் எல்லாம் கேக்கலை, கையில காசு இல்ல, அதனால நம்ம புள்ளைய வித்து பாட்டில் வாங்கப்போறேன் என குழந்தையை பிடுங்கிக்கொண்டு சென்றிருக்கிறான். மனைவியின் கதறல் எதுவும் காதில் விழவில்லை. சரி, இவன்தான் இப்படி என்றால், அந்த மதுக்கடையில் இருந்தவர்களுக்கு பிள்ளை கறி என்றாலும் தின்பார்கள் போல. குழந்தையை 1000 ரூபாய்க்கு வாங்கிக்கொண்டு, பாட்டிலை கொடுத்திருக்கிறார்கள். மனைவியின் புகாரின்பேரில் காவல்துறை வழக்குப் பதிந்துள்ளது. இப்படியும் வயிறு வளர்க்க வேண்டுமா? ஏன் இன்னும் காற்றில் விஷம் பரவவில்லை? இந்த செய்தியில் ஒரு நல்ல செய்தி ஒரு கெட்ட செய்தி. நல்ல செய்தி, இது நடந்தது தமிழ்நாட்டில் அல்ல, ஒடிஷா, புஜாரிகுடாவில். கெட்ட செய்தி, இது தமிழகத்தில் நடப்பதற்கு ரொம்ப நாளெல்லாம் ஆகாது.