இன்று 4-வது டி20 கிரிக்கெட் போட்டி – இந்திய அணிக்கு பதிலடி கொடுக்குமா நியூசிலாந்து?

 

இன்று 4-வது டி20 கிரிக்கெட் போட்டி – இந்திய அணிக்கு பதிலடி கொடுக்குமா நியூசிலாந்து?

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று வெல்லிங்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

வெல்லிங்டன்: இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20  கிரிக்கெட் போட்டி இன்று வெல்லிங்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

நியூசிலாந்து எதிரான டி20 தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 3-வது டி20  கிரிக்கெட் போட்டியில் ரோகித் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தால் சூப்பர் ஓவரில் வென்று இந்திய அணி டி20 தொடரைக் கைப்பற்றியது. இதன் மூலம் நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி முதன்முறையாக டி20 தொடரை வென்றுள்ளது. இந்த நிலையில், இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20  கிரிக்கெட் போட்டி இன்று வெல்லிங்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

ttn

தொடரை கோட்டை விட்டு விட்டாலும் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் வென்று ஆறுதல் அடையும் முனைப்பில் நியூசிலாந்து அணி களமிறங்கும் என்பதால் இந்தப் போட்டியிலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் டி20 தொடரை 5-0 என்று கைப்பற்றுவோம் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இன்று இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கும். மேலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஏற்கனவே தொடரைக் கைப்பற்றி விட்டதால் இதுவரை விளையாடாத வீரர்களுக்கு இரண்டு போட்டிகளில் வாய்ப்பளிக்கப்படும் என்று விராட் கோலி கூறியுள்ளார்.