இன்று முதல் ஒளிபரப்பாகிறது சித்தி-2 சீரியல்.. இன்னைக்கு மட்டும் ஒரு மணி நேரம் போடுவாங்களாம்!

 

இன்று முதல் ஒளிபரப்பாகிறது சித்தி-2 சீரியல்.. இன்னைக்கு மட்டும் ஒரு மணி நேரம் போடுவாங்களாம்!

சன்டிவியுடன் இணைந்து ராதிகா சரத்குமார் நடித்த சித்தி, அண்ணாமலை, அரசி,வாணி ராணி உள்ளிட்ட சீரியல்கள் மெகா ஹிட்டடித்தது.

நடிகை ராதிகா சரத்குமார் வெள்ளித்திரையில் கொடிகட்டிப் பறந்ததுடன் சின்னதிரையிலும் தனி முத்திரை பதித்தார். சன்டிவியுடன் இணைந்து  இவர் நடித்த சித்தி, அண்ணாமலை, அரசி,வாணி ராணி உள்ளிட்ட சீரியல்கள் மெகா ஹிட்டடித்தது. இதிலும் குறிப்பாகச் சித்தி சீரியல் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது எனலாம்.

ttn

இந்நிலையில் 1999 ஆம் ஆண்டின் இறுதியில்  சன் டிவியில் ஒளிபரப்பான “சித்தி” சீரியல் தற்போது அதே பெயரில் மீண்டும் சித்தி 2 ஆக ஒளிபரப்பாகவுள்ளது. கே.விஜயன் இயக்கவுள்ள இந்த சீரியலில் ராதிகா, பொன்வண்ணன், பிரீத்தி  உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்க உள்ளார்கள். இதற்காக சன் தொலைக்காட்சி ‘சித்தி 2 ஸ்பெஷல்’ என்ற நிகழ்ச்சியைக் கூட ஒளிபரப்பியது. 

ttn

அதில், இந்த சீரியலை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்ட பிரபலங்கள் தங்களது கதாபாத்திரத்தைச் சுருக்கமாகக் கூறினார்கள். அப்போது ராதிகா, தான் சித்தி 2 இல் சாராதா என்னும் குடும்ப பெண்ணாகவும், அந்த கதாபாத்திரத்துக்குக் கணவராக சண்முகம் என்னும் ரோலில் பொன்வண்ணன் நடிக்கிறார் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் சித்தி 2 இன்றுமுதல் சன்டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இன்று மட்டும் சித்தி 2 ஒரு மணி நேரத்திற்கு ஒளிபரப்பாக உள்ளது, அதாவது 9 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.