“இனிமே எல்லா கேள்விக்கும் பதில் சொல்லுவியா?” – நன்றாக படிக்கும் மாணவனை தாக்கிய சக வகுப்பு மாணவர்கள்

 

“இனிமே எல்லா கேள்விக்கும் பதில் சொல்லுவியா?” – நன்றாக படிக்கும் மாணவனை தாக்கிய சக வகுப்பு மாணவர்கள்

பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவனை சக வகுப்பு மாணவர்கள் பைப்பால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புனே: பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவனை சக வகுப்பு மாணவர்கள் பைப்பால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புனேவில் ஹடஸ்பர் எனும் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் நன்றாக படிக்கும் மாணவனை சக வகுப்பு மாணவர்கள் பைப்பால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பில் ஆசிரியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அந்த மாணவன் சிறப்பாக பதில் சொல்லுவான் என்று கூறப்படுகிறது. இதனால் பொறாமையால் வெந்த சக வகுப்பு மாணவர்கள் ஏழு பேர், நன்றாக படிக்கும் மாணவனை தனியாக அழைத்து சென்று பைப்பால் பலமாக தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த வாரம் (ஜனவரி.22) நடந்துள்ளது. இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் காத்திருந்துள்ளனர். ஆனால் சரியான நடவடிக்கை எடுக்கப்படாததால் வான்வாடி போலீஸ் நிலையத்தில் ஏழு மாணவர்கள் மீது பெற்றோர் புகார் அளித்துள்ளனர். ஆனால் இன்னும் ஏழு மாணவர்களும் கைது செய்யப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சக மாணவனை வகுப்பு தோழர்களே தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பேசுபொருள் ஆகியுள்ளது.