இனிமேல் சினேகா நடிக்க மாட்டார்? காரணம் இது தான்! 

 

இனிமேல் சினேகா நடிக்க மாட்டார்? காரணம் இது தான்! 

என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவர் நடிகை சினேகா. முன்னணி நடிகர்களான, விஜய், அஜித், கமல், சூர்யா, தனுஷ் என பலருடன் நடித்த இவர் கடந்த 2012ம் ஆண்டு பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்பு திரையுலகை விட்டு ஒதுங்கிய இவர் குழந்தை பிறந்த பின், வேலைக்காரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார். 

அதைத் தொடர்ந்து சினேகா மீண்டும் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. இதனால் மீண்டும் சினேகா திரைப்படங்களில் நடிக்கமாட்டார் என்று பேசப்பட்டது. ஆனால் இதுகுறித்து அவர்கள் இருவருமே எதுவுமே சொல்லாமல் மவுனம் காத்து வந்தனர். 

இந்த நிலையில் இதுகுறித்து பிரசன்னா சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் உறுதிசெய்துள்ளார். அதையொட்டி அவர்களுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.