இனிமேல் காய்கறி, பழங்கள் உங்கள் வீட்டுக்கே வந்து விடும். முழு விவரம் உள்ளே!

 

இனிமேல் காய்கறி, பழங்கள் உங்கள் வீட்டுக்கே வந்து விடும். முழு விவரம் உள்ளே!

கொரோனா வைரஸின் கோரம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸின் கோரம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க ஒரே வழி, சமூக விலகலை கடைபிடிக்க வேண்டியது தான். அதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். 

ttnm

ஆனால், மருந்து, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும் என்று அரசு அறிவித்திருப்பினும் அதில் மக்கள் பல பிரச்னைகள் இருக்கின்றன. மக்களின் சிரமத்தை போக்க, அரசின் தோட்டக்கலைத்துறை சார்பில் ஆன்லைன் மூலம் காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம், காய்கறிகளை வீட்டுக்கே கொண்டு வந்து டெலிவரி செய்யும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. www.ethottam.com என்னும் இந்த இணையதள முகவரியை பயன்படுத்தி காய்கறிகளை வாங்கிக் கொள்ளலாம்.