இந்த வெற்றியை காண கலைஞர் இல்லையே!… தொண்டர்கள் மத்தியில் கலங்கிய ஸ்டாலின்!?

 

இந்த வெற்றியை காண கலைஞர்  இல்லையே!… தொண்டர்கள் மத்தியில் கலங்கிய ஸ்டாலின்!?

மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதையடுத்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களைச்  சந்தித்தார்.

மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதையடுத்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களைச்  சந்தித்தார்.

மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியை திமுக தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். 

stalin

இதையடுத்து நேற்று மாலை தொண்டர்களைச் சந்தித்த திமுக தலைவர் முக. ஸ்டாலின் அவர்கள் மத்தியில் பேசினார். அப்போது, மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியைத் தேடித்தந்த மக்களுக்கு நன்றி. அது போல் வெற்றியைத் தேடித் தரப் பாடுபட்டிருக்கும் கலைஞரின் உயிரினும் மேலான உடன்பிறப்புகளுக்கும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி’ என்றார்.

mkstalin

‘தலைவர் கலைஞர் இல்லாமல் நடைபெறும் தேர்தல் இது.  அவர் இருக்கும் போது  என்னென்ன கற்று தந்தாரோ, அவற்றை இப்போது செய்து காட்டி  இருக்கிறோம். ஆனால் இப்போது ஒரே ஒரு கவலைதான்.  இந்த வெற்றியைப் பார்க்கக் கலைஞர்  இல்லையே, இருப்பினும் அவற்றின் சிலைக்கு முன்னால், அவரை உருவாக்கிய அண்ணாவின் சிலைக்கு முன்னால்  நின்று உங்களுக்கு வாழ்த்துகளைக் கூறிக் கொள்கிறேன்’ என்று உணர்ச்சி பொங்கப் பேசியுள்ளார்.