‘இந்த வீட்டிலேயே மோஸ்ட் பாப்புலர் நான் தான்’: தனக்கு தானே முடிசூட்டிக் கொண்ட வனிதா 

 

‘இந்த வீட்டிலேயே மோஸ்ட் பாப்புலர் நான் தான்’: தனக்கு தானே முடிசூட்டிக் கொண்ட வனிதா 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை  பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, சாக்ஷி, அபிராமி, சரவணன் மற்றும் மதுமிதா ஆகியோர் வெளியேறியுள்ளனர். அதைத்தொடர்ந்து இந்த வாரம் நாமினேஷன் கிடையாது என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 

இந்த நிலையில் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில், மக்களிடம் பாப்புலர் ஆனவர்களை வரிசைப்படுத்தச் சொல்லி டாஸ்க் ஒன்றை வனிதாவிடம் பிக்பாஸ் கொடுத்துள்ளார். அதில், ‘மோஸ்ட் பாப்புலர் நான் தான் என்று வனிதா தனக்கு தானே முடிசூட்டி கொண்டுள்ளார். இரண்டாவது இடத்தை சேரனுக்கு, மூன்றாவது இடத்தை லாஸ்லியாவுக்கு, ஆறாவது, ஏழாவது இடத்தை தர்ஷனுக்கு மற்றும் லாஸ்லியாவுக்கு கொடுத்துள்ளார். 

 இதை கொடுத்து விட்டு என்னை யாரும் தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள் நான் உங்களின் பாப்புலாரிட்டி மட்டும் இல்லாமல் திட்டுவதையும் சேர்த்துத் தான் வரிசைப்படுத்தி இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.