இந்த இரண்டு நாட்களில் கன மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

 

இந்த இரண்டு நாட்களில் கன மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கடந்த சில நாட்களுக்கு முன்னால் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மழை பெய்ததில் தமிழகத்தில் நிலவி வந்த குடிநீர் பஞ்சம் ஓரளவுக்குத் தணிந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்னால் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மழை பெய்ததில் தமிழகத்தில் நிலவி வந்த குடிநீர் பஞ்சம் ஓரளவுக்குத் தணிந்தது. நேற்று தமிழகத்தில் பருவ மழை துவங்கியதால், அனைத்து மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்குகிறது. நிறைய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டு வருகின்றன. சென்னையில் ஏற்கனவே ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மீண்டும் நிகழாமல் இருக்க, மழை பாதிப்புப் பகுதிகள் கண்டறியப்பட்டு பருவ மழைக்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

Rain

இந்நிலையில், இன்று முதல் வரும் 20ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தமிழகத்தில் வரும் 21,22ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.