இந்து மதத்தை காக்க குறைந்தது 5 குழந்தைகளைப் பெற்று கொள்ளுங்கள் : நித்தியானந்தா வேண்டுகோள்!

 

இந்து மதத்தை காக்க குறைந்தது 5 குழந்தைகளைப் பெற்று கொள்ளுங்கள் : நித்தியானந்தா வேண்டுகோள்!

இருப்பினும் சர்வதேச போலீசாரல் தேடப்பட்டுவரும் நித்தியானந்தா, தொடர்ந்து யூடியூபில் சத்சங்கம் நிகழ்ச்சியில் உரையாற்றிவருகிறார். 

சிறுமிகள் கடத்தல், பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்  நித்தியானந்தா. இவர் கரீபியன் தீவுகள் பகுதியில் ஒரு சிறிய தீவை விலைக்கு வாங்கி, அதை கைலாசம் என்ற தனிநாடாக அறிவிக்கப்போவதாக கூறினார். இதற்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டது. லட்சக் கணக்கான மக்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்ததாகவும் செய்திகள் வெளியாகின.  இருப்பினும் சர்வதேச போலீசாரல் தேடப்பட்டுவரும் நித்தியானந்தா, தொடர்ந்து யூடியூபில் சத்சங்கம் நிகழ்ச்சியில் உரையாற்றிவருகிறார். 

tt

சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட நித்தியானந்தா சிஷ்யைகள் கைலாசா தீவில் கொரொனா இல்லை என   டிக்டாக் செய்தனர். அதேபோல நித்தி வெளியிட்ட வீடியோவில், தமிழகத்திற்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆவேசமாக கூறியிருந்தார். 

tt

இந்நிலையில் நித்தியானந்தா கடந்த வாரம் வெளியிட்டுள்ள வீடியோவில் , “இந்திய மாஸ் மீடியா கலாச்சாரம் மிகவும் மோசமானது. இவர்கள் இந்துக்களை  தீவிரவாதிகள், மோசமானவர்கள் என்று சித்தரிக்கிறார்கள்.  வீடு, கார், 2 குழந்தை, ஐடி வேலை என இருக்காதீர்கள். நான் இந்துக்களை வேண்டி கேட்டு கொள்கிறேன்.   இந்து மதத்தை காக்க அடுத்த 100 ஆண்டுகளுக்கு இந்துக்கள் குறைந்தது 5 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு இந்து மதத்தை கற்றுக்கொடுங்கள்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

உலக நாடுகள் கொரோனாவால் செத்து கொண்டிருக்கும் நிலையில் நித்தியானந்தா ஜாலியாக மீண்டும் தனது லீலைகளை சத்தமில்லாமல் தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.