இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை கைது செய்ய பிடிவாரண்ட்!

 

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை கைது செய்ய பிடிவாரண்ட்!

அடுத்த 15 நாட்களுக்குள் இருவரும் ஆஜராகாத பட்சத்தில் அவர்களை கைது செய்யவும் உத்தரவிட்டார்.

கொல்கத்தா : குடும்ப வன்முறை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து கொல்கத்தா நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு, இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் நேரம் செலவழித்ததாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும்  ஷமியும், அவரது சகோதரர் ஹஸித் அகமது தன்னைத் துன்புறுத்தியதாகவும், கொலை செய்ய முயன்றதாகவும் ஷமியின் மனைவி ஹசின் ஜகான் கொல்கத்தா காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

shami

இந்தப் புகார் தொடர்பான வழக்கு கொல்கத்தா அலிப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இது வழக்கில்  ஷமி மற்றும் அவரது சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி பலமுறை உத்தரவிட்ட போதும் இருவரும் ஆஜராகவில்லை என்று தெரிகிறது. 

sami

இந்நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகாத கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மற்றும் அவரது சகோதர் ஹசித் அகமது இருவரையும் கைது செய்ய நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார்.  மேலும், அடுத்த 15 நாட்களுக்குள் இருவரும் ஆஜராகாத பட்சத்தில் அவர்களை கைது செய்யவும் உத்தரவிட்டார்.